டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தமிழகம் திரும்பியதும் மாநில சுகாதாரத்துறையின் அறிவுரை பிரகாரம் அவர்களை தனிமைப்படுத்தி கொரோனா தொற்று உள்ளதா என தீவிரமாக கண்காணிக்கபட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நோய் தொற்று இல்லை என மருத்துவ சான்றுகள் தெரிவித்திருந்த நிலையில அவர்களை படிப்படியாக விடுவிக்க மருத்துவ துறையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.
அதன்படி அதிராம்பட்டினத்திலிருந்து டெல்லி சென்று திரும்பிய பலருக்கு நோய் தொற்று இல்லை என மருத்துவ ஆய்வு அறிக்கைகள் வெளியானதை அடுத்து அவர்களை செங்கிப்பட்டி மருத்துவமனையில் இருந்து தனி வாகனம் மூலம் சுகாதார அதிகாரிகள் அதிராம்பட்டினம் அனுப்பிவைத்தனர்.
முன்னதாக தமுமுகவின் மாநில துணைத்தலைவர் அஹமது ஹாஜா முதல்வரின் தனி கவனத்திற்கு இது குறித்து கடிதம் ஒன்று அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வீடியோ :