பட்டுக்கோட்டை சரக புதிய டிஎஸ்பி-யாக புகழேந்தி கணேஷ் இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி புகழேந்தி கணேஷுக்கு பட்டுக்கோட்டை சரக காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து குற்ற நடவடிக்கைகள் குறைப்பது குறித்து போலீசாருடன் புதிய டிஎஸ்பி ஆலோசனை நடத்தினார். பட்டுக்கோட்டை சரக டிஎஸ்பி-யாக பொறுப்பேற்றுள்ள புகழேந்தி கணேஷ், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் இருந்து மாறுதலாகி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.
அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...
புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர்.
அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...





