Monday, April 29, 2024

விமானத்தில் சிகரட்,சிறைப்பிடித்த சிப்பந்திகள்!

Share post:

Date:

- Advertisement -

சென்னையிலிருந்து, பீஹார் மாநிலம், பாட்னாவிற்கு, நேற்று பகல், 12:20 மணிக்கு, விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வந்த, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, பிரவீன் குமார் ஷர்மா, 40 என்பவர், விமானத்தில் ஏறி, அவருக்கான இருக்கையில் அமர்ந்தவுடன், சிகரெட் எடுத்து, பற்ற வைத்தார். இதைக்கண்ட விமான ஊழியர்கள், ‘விமானத்திற்குள் சிகரெட் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால், விமானம் எளிதில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளது’ என்றனர். பிரவீன் குமார், எதையும் கண்டுகொள்ளாமல், தொடர்ந்து சிகரெட் பிடித்தார். இதுகுறித்து, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து, பிரவீன் குமாரை விமானத்திலிருந்து வெளியே அழைத்து வந்தனர். அவரை மேல் விசாரணைக்காக, விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால், விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...