ஏரிபுறக்கரை ஊராட்சியில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்கும் பணிகளில் மந்த நிலை ஏற்பட்டு உள்ளதாக கூறி ஏரிபுறக்கரை பிலால் நகர், குப்பம் பகுதியை சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்களின் பிரதான கோரிக்கையாக இவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பன உள்ளீட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.