Saturday, March 28, 2026

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிரையில் சாலை மறியல் – எதிர்க்கட்சிகள் பங்கேற்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 14 நாட்களாக விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் இன்று “பாரத் பந்த்” என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

முழு அடைப்பின் ஒரு அங்கமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகள் இணைந்து பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எஸ்டிபிஐ, தமுமுக, முஸ்லீம் லீக், மஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்து உள்ளன. சாலை மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் வெல்லப் போவது யார்!!

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...
spot_imgspot_imgspot_imgspot_img