Friday, May 3, 2024

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிரையில் சாலை மறியல் – எதிர்க்கட்சிகள் பங்கேற்பு !

Share post:

Date:

- Advertisement -

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 14 நாட்களாக விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் இன்று “பாரத் பந்த்” என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

முழு அடைப்பின் ஒரு அங்கமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகள் இணைந்து பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எஸ்டிபிஐ, தமுமுக, முஸ்லீம் லீக், மஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்து உள்ளன. சாலை மறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...