Saturday, December 13, 2025

ரூ. 70 லட்சம் சீட்டு மோசடி – பாஜக தேர்தல் பொறுப்பாளர் கந்துவட்டி சீனிவாசன் கைது !

spot_imgspot_imgspot_imgspot_img

சென்னையில் நிதி நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் ரூ70 லட்சம் மோசடி செய்ததாக பாஜகவின் வடசென்னை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் சீனிவாசன், அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை செம்பியம் பகுதியில் சுவர்ணலட்சுமி நிதி நிறுவனம் நடத்தி வந்தார் சீனிவாசன். மேலும் கந்துவட்டி தொழிலும் செய்து வந்தார்.

வட்டி தராதவர்கள், பணத்தை திருப்பி கொடுக்காதவர்களை அடியாட்கள் மூலம் மிரட்டி வந்தாராம் சீனிவாசன். இந்த நிலையில் சீட்டு பிடிப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்திருக்கிறார் சீனிவாசன்.

ஆனால் அப்படி வசூல் செய்த பணத்தை சீனிவாசன் திருப்பி தராமல் ரூ70 லட்சம் மோசடி செய்திருக்கிறார் என்பது புகார். இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் இன்று சீனிவாசனையும் அவரது மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source : One India Tamil

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...

Indigo விமானத்தின் தரமற்ற சேவை : குமுறும் அதிரை பயணிகள்..!!

இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவைகளில் பெரிதும் பெயர் போன Air India பயணிகளில் அதிருப்திக்கும் அவ்வப்போது அசம்பாவிதங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்வது...

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...
spot_imgspot_imgspot_imgspot_img