Monday, April 29, 2024

பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் எப்போது ? அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

Share post:

Date:

- Advertisement -

அண்ணா பல்கலைக்கழகம் இன்று (20/10/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் நவம்பர் 1- ஆம் தேதி முதல் தொடங்கும்.

நவம்பர் 15- ஆம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெறும். இறுதியாண்டு மாணவர்கள் விடுதிகளைக் காலி செய்த பின் முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடைபெறும். அடுத்தாண்டு மார்ச் 7- ஆம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு தொடங்கும்.

நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தின் பெரும் பகுதி தொழில்துறையின் பங்களிப்பு இடம் பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு திறன்களை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு பல்கலைக்கழக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...