அதிரை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திய கையோடு அவசர கதியில் வார்டுகளை மறுவரையரை செய்ததில் குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிரையின் மக்கள் தொகைக்கு ஏற்ப 33 வார்டுகளை உருவாக்காமல் வெறும் 27 வார்டுகளுடன் அதிகாரிகள் நிறுத்திவிட்டனர். இதனை கண்டித்து சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. இந்நிலையில் அதிரை நகராட்சி வார்டு குளறுபடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் Z.முகம்மது தம்பி தொடுத்த வழக்கின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அதிரை நகராட்சிக்கான தேர்தல் தள்ளிப்போகுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
More like this

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக...

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...





