அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சி தலைமை அறிவித்தது. கிழக்குக்கு இராம.குணசேகனும் மேற்கிற்கு S.H.அஸ்லமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெப்போதும் இல்லாத வகையில் நடந்து முடிந்த தேர்தலில் அனல்பறந்தது.
இந்நிலையில், இன்று திமுக அரசு 4ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் கா.அண்ணாதுரை MLA சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலின்போது புதிதாக உருவாக்கப்பட்ட அதிரை மேற்கு நகரம் சார்பில் செய்யப்பட்ட தேர்தல் பணிகள் குறித்து முதலமைச்சரிடம் கா.அண்ணாதுரை எடுத்துக்கூறினார். இதனையடுத்து இனி வரும் காலத்திலும் கட்சி பணியை சிறப்பாக செய்ய அதிரை மேற்கு நகர பொறுப்பாளர் S.H.அஸ்லத்திற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.