Wednesday, February 11, 2026

அதிரையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு ஹிஜாப் தீர்ப்புக்கு எதிரான போராட்டம்!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகரில் கடந்த சில நாட்களாக ஹிஜாப் தடைக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக காதிர் முகைதீன் கல்லூரி மாணவ மானவிகள் தொடர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 18ஆம் தேதி நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கூடி கண்டனத்தை பதிவு செய்தனர்.

அதன்படி இன்று மாலை அனைத்து முஹல்லா கட்டமைப்பு மற்றும் அனைத்து இயக்கங்களின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் அதிராம்பட்டினம் பேரூந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்ட இவ்வார்பாட்டாத்தில். ஆன்மிக பேச்சாளர் ஹுசைன் மன்பஈ மற்றும் மருது மக்கள் இயக்கத்தின் முத்துப்பாண்டி, விமன்ஸ் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் D ஆஷா உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நகர்மன்ற சேர்மன் MMS கறிம் தாஹீரா அம்மாள் மற்றும் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகிகளான PMK தாஜூதீன், ஆஃப்ரீன் நெய்னா முஹம்மது உள்ளிட்ட ஜமாத்தினர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img