Wednesday, May 8, 2024

JUST IN – ராஜிவ் கொலை வழக்கு: நளினி உள்ளிடட 6பேர் விடுதலை – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Share post:

Date:

- Advertisement -

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த எழுவரில், பேரறிவாளனை மட்டும், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 142-ன்படி உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் விடுதலை செய்தது.

அதைத் தொடர்ந்து நளினி உட்பட சிறையிலிருக்கும் மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கில் தமிழக அரசு ஏற்கெனவே கொண்டுவந்திருந்த தீர்மானத்தை மேற்கோள்காட்டி, நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து, அவர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் நளினி உட்பட மற்ற ஆறு பேர் விடுதலை தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் ஆறு பேரையும் விடுதலை செய்ய இன்று உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு, “சிறையில் 30 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்துவரும் 6 பேரின் நடத்தையும் திருப்திகரமாக இருந்தது” எனத் தெரிவித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...