Monday, December 1, 2025

அதிரையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடக்கம்!(படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசாக அனைத்து வகை குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000, ஒரு கரும்பு, பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி இன்று 10ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் இன்று காலை முதல் தொடங்கியது.

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள நியாயவிலைக்கடை எண் 5ல் நடைபெற்ற பொங்கல் பரிசு விநியோக நிகழ்வில் அதிராம்பட்டினம் நகரமன்றத்தலைவரின் கணவர் M.M.S. அப்துல் கரீம், நகரமன்ற துணைத்தலைவர் இராம. குணசேகரன், 22வது வார்டு நகரமன்ற உறுப்பினர் PGT. செய்யது முஹம்மது, 21வது வார்டு நகரமன்ற உறுப்பினர் அஹமது மன்சூர், 24வது வார்டு நகரமன்ற உறுப்பினர் அப்துல் மாலிக், கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள் PGT. முஹம்மது இஸ்மாயீல், M. நஸ்ருதீன் சாலிஹ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img