Thursday, May 16, 2024

அதிரையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடக்கம்!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாடு அரசின் சார்பில் பொங்கல் பரிசாக அனைத்து வகை குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000, ஒரு கரும்பு, பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி இன்று 10ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் இன்று காலை முதல் தொடங்கியது.

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் உள்ள நியாயவிலைக்கடை எண் 5ல் நடைபெற்ற பொங்கல் பரிசு விநியோக நிகழ்வில் அதிராம்பட்டினம் நகரமன்றத்தலைவரின் கணவர் M.M.S. அப்துல் கரீம், நகரமன்ற துணைத்தலைவர் இராம. குணசேகரன், 22வது வார்டு நகரமன்ற உறுப்பினர் PGT. செய்யது முஹம்மது, 21வது வார்டு நகரமன்ற உறுப்பினர் அஹமது மன்சூர், 24வது வார்டு நகரமன்ற உறுப்பினர் அப்துல் மாலிக், கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகிகள் PGT. முஹம்மது இஸ்மாயீல், M. நஸ்ருதீன் சாலிஹ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...