தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பதிவாகியுள்ளது.
அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதலே தொடர்ச்சியாக மிதமான மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, தொடர்ந்து மிதமான மழை பெய்து வருவதால், அதிராம்பட்டினம்முமுழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.