Tuesday, May 14, 2024

தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு அதிக வாக்குகளை பெற்றுத்தருவோம்..!! -S.H.அஸ்லம்

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகர தி.மு.கழகத்தை நிர்வாக வசதிக்காகவும் கட்சி பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் கிழக்கு, மேற்கு என்று இரண்டாக அமைத்து அண்மையில் அக்கட்சி தலைமை அறிவித்தது. இதனையடுத்து நேற்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் அதிரை மேற்கு நகர அலுவலகத்தில் அதன் பொறுப்பு குழுவின் முதலாவது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பொறுப்பு குழு உறுப்பினர் N.A.முகம்மது யூசுப் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் பொறுப்பாளர் S.H.அஸ்லம், பொறுப்புக்குழு உறுப்பினர்களான M.சேக்தாவூத், N.ரிபாயா, மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு தலைவர் ஜமாலுதீன், சுற்றுச்சூழல் அணி இணை அமைப்பாளர் M.அகமது, அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் அஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் கழக நிர்வாக வசதிக்காகவும் கழக பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் அதிராம்பட்டினம் நகரத்தை கிழக்கு, மேற்கு என 2 கழகங்களாக அமைத்து அறிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரும் கழக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தலைவரின் 71வது பிறந்த நாளையொட்டி சிறப்பு பொதுக்கூட்டம் நடத்துதல், வரும் மக்களவை தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு அதிகப்படியான வாக்குகளை பெற்றுக்கொடுத்தல், திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை இல்லம்தோறும் கொண்டு சேர்த்தல் ஆகிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படாது என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்ததோடு அதிரை மேற்கு நகர பகுதிகளில் கடந்த காலங்களில் கழக பொறுப்புகளில் இருந்த வார்டு செயலாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முன்னோடிகள் அனைவரையும் அழைத்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...