செய்திகள்

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...
அதிரையில் இறுதிக்கட்டத்தை எட்டிய ஆதார் சிறப்பு முகாம்! பயன்படுதிக்கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு!!
அதிரை மக்களின் தேவையற்ற பொருட்செலவு மற்றும் அலைச்சலை தவிர்க்க ஏதுவாக இம்தாத் இந்தியாமற்றும் தபால்துறை இணைந்து ஆதார் சிறப்பு முகாமை நடத்தி வருகின்றன. புதுமனைத்தெருவில் உள்ளஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறும் இந்த ஆதார் சிறப்பு முகாமில் 700க்கும் மேற்பட்டோர்பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த சிறப்பு முகாம் நிறைவு பெறஇருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. முன்பதிவுமற்றும் மேலதிக தகவல்களுக்கு +91 9944046001 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்புக்கொள்ளவும்.
20 best cheap iphone in 202
20 best cheap iphone in 2023Italian olive oil Fair Food & LifestyleContentGlory Casino offers you more than 3,500 gamesJEETWIN CASINO: EXCLUSIVE BONUSSlots Internet Casino...
அதிரையர்களை அலறவிட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! மாணவர்களின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்?
கொரோனா காலத்தில் வீட்டிற்குள் அடைப்பட்டிருந்த தங்களது குழந்தைகளை அமைதிபடுத்த பெற்றோர்கையில் எடுத்த ஸ்மார்ட் ஃபோன் எனும் ஆயுதம் மாணவர்களின் செயல் திறனிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சனியனே! என்ன நிம்மதியா தூங்கவிடு!! இந்த போனை எடுத்துக்கிட்டு தொல என்று கொரோனா லாக் டவுனில் பெற்றோர் செய்த செயல் நாளடைவில் அந்த குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கமாகவே மாறிவிட்டது. எதை பார்க்கிறோம் எதற்கு பார்க்கிறோம் என்று கூட தெரியாமல் ரீல்ஸ்களை ஸ்கோர்ல் செய்யும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதெல்லாம் தான் நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் எதிரொலித்திருக்கிறது. அதிரையை பொறுத்தவரை மாணவிகள் 97.5% தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். ஆனால் மாணவர்கள் வெறும் 80% மட்டுமே தேர்ச்சிக்கான எல்லையை தாண்டி உள்ளனர். இதில் பலர் ஜெஸ்ட் பாஸ்.
தேர்வுகளோ, மதிப்பெண்களோ எந்த ஒரு மாணவனின் எதிர்காலத்தையும் தீர்மானிக்காது என்பதில் மாற்றுகருத்தில்லை. அதேசமயம் ஸ்மார்ட் ஃபோன் வலைக்குள் சிக்கி தேர்ச்சியை தள்ளிபோடும் மாணவர்களின் எதிர்காலம் குறித்து பெற்றோரும் ஆசிரியர்களும் சிந்தித்தே ஆக வேண்டும்.
10ம் வகுப்பு தேர்வு முடிவு: காதிர் முகைதீன் பெண்கள் பள்ளி 94.5% தேர்ச்சி!!
அதிரை காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளியில் கடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 129 மாணவிகள் எழுதினர். இதில் 94.5% மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவதுதேர்வு எழுதிய 129 பேரில் 122 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முன்னதாக பன்னிரெண்டாம் வகுப்புபொதுத்தேர்வில் இந்த பள்ளி 100% தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
+2 தேர்வில் அதிரையின் சராசரி தேர்ச்சியை கூட தொடாத மாணவர்கள்! 99.3% தேர்ச்சி பெற்று...
தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதன்படி அதிரையில் உள்ள கல்வி நிறுவனங்களின்சராசரி தேர்ச்சி விகிதம் 95.5%மாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 99.3% ஆகும். ஆனால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 92% மட்டுமே. இது அதிரையின் சராசரி தேர்ச்சி விகிதமான95.5சதவீதத்தை விட 3.5% குறைவாகும். மேலும் மாணவர்களை விட 7.3% மாணவிகள் அதிகம் தேர்ச்சிபெற்று இந்தமுறையும் மாஸ் காட்டியுள்ளனர். அதேசமயம் அதிரையில் பன்னிரெண்டாம் வகுப்புக்கு பிறகு70%க்கும் அதிகமான மாணவிகள் உயர் கல்வியை தொடர முடியாத சூழல் நிலவுவது குறிப்பிடத்தக்கது.
98% தேர்ச்சி!! 10ம் வகுப்பு தேர்வு முடிவிலும் ஸ்கோர் செய்த அதிரை அரசு பள்ளி!
அதிரை அரசினர் மகளிர் மேல்நிலையில் கடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 123 மாணவிகள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 98% தேர்ச்சியை இந்த அரசு பள்ளி பெற்றுள்ளது. கொரொனா பேரிடர் காலத்திலும் மாணவிகளுக்கு தேவையான பயிற்சியை அரசு பள்ளி ஆசிரியர்கள்முறையாக அளித்ததாலேயே இந்த தேர்ச்சி சாத்தியமானதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். முன்னதாகபன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 99% தேர்ச்சியை இதே அரசு பள்ளி பெற்றது குறிப்பிடத்தக்கது.







