Saturday, September 13, 2025

அதிரையில் இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை..!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் முழுவதும் கோடை வெயில் பொதுமக்களை பெரும் அளவில் வாட்டி வருகிறது.
இதனால்,பலர் வீடுகளில் தஞ்சம் அடைந்து கிடக்கும் சூழ்நிலையை நம்மால் காணமுடிகிறது.

இந்த கோடை வெயிலை தனிர்க்கும் வகையில் நேற்றைய தினம் கன்னியாகுமரி போன்ற இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனை அறிந்த பலரும் மழை தங்கள் பகுதிகளிலும் பெய்யுமா என எதிர்பார்த்த வண்ணம் இருந்தன.

இது, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கும் பொருந்தும்.

இந்நிலையில், அதிரை மக்களின் கோடை வெளிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் நேற்று இரவு சுமார் 12:30மணிமுதல் லேசான மழை காற்று வீசத்தொடங்கியது.

இதனை தொடர்ந்து, இடியின் சப்தம் அதிகமாக இருந்தாலும், மின்னலின் வேகத்தாலும் மக்கள் பலர் லேசான அச்சத்துடன், பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

இதனையடுத்து, இரவு சுமார் 2:50மணியளவில் லேசாக மழை தூறல் தொடங்கி அதிகாலை சுமார் 4:45வரை மழை தொடர்ந்து லேசான முறையில் பெய்தது.

இதனால்,அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும்...

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து...

அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 8 செமீ மழை பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வர...
spot_imgspot_imgspot_imgspot_img