Saturday, September 13, 2025

வெளியேறிய கங்கை : பைனலில் கன்னியாகுமரி!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.

பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு கொண்டு இத்தொடரில் விளையாடி வருகின்றனர்.

இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் தூத்தூர் கன்னியாகுமரி – சிவகங்கை அணிகள் மோதின.

இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வகையில் இரு அணியினரும் கோல் அடிப்பதற்கான முயற்ச்சிகளில் தீவிரம் காட்டினாலும் தூத்தூர் கன்னியாகுமரி அணி முதல் பகுதி நேர ஆட்டத்தில் தனது முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது.

பின்னர் இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் கோல் அடிப்பதற்காக பல வியூகங்களை சிவகங்கை அணி வகுத்தாலும் அது சிவகங்கை வீரர்களுக்கு ஏமாற்றத்தையே தந்தது.

இறுதியாக தூத்தூர் கன்னியாகுமரி அணி 1-0 என்ற கோல் கணக்கில் நில்லாமல் ஓடிய கங்கையின் வெற்றியை தடுத்து நிறுத்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

 

நாளைய தினம் இரண்டாவது அரையிறுதியில் நாகூர் – காயல்பட்டினம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர  கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது. இதில்...

அதிரையில் நடைபெற்ற கால்பந்து தொடரில் 2ம் பரிசை தட்டிச்சென்ற WFC ஜூனியர்...

அதிரை பிலால் நகர் BBFC நடத்திய மூன்றாம் ஆண்டு மாபெரும் மூவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 4,5-07-2025 ஆகிய தினங்களில் பிலால்...
spot_imgspot_imgspot_imgspot_img