Saturday, December 13, 2025

சிம் கார்டு இல்லாமல் கால் செய்யும் வசதி: பிஎஸ்என்எல் அறிமுகம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

நாட்டிலேயே முதன்முறையாக, சிம்கார்டு இல்லாமல் மொபைல் ஃபோனில் பேசும் வசதியை பிஎஸ்என்எல் நிறுவனம் ஜூலை 25-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.

இதுதொடர்பாக பிஎஸ்என்எல் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: நாட்டிலேயே முதன்முறையாக இணையதளம் வாயிலாக இயங்கும் தொலைபேசி சேவையை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்துகிறது.

இணைய சேவை உள்ள ஆன்ட்ராய்ட், வின்டோஸ், ஆப்பிள் உள்ளிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் மொபைல் ஃபோன்கள், டேப்லட்டுகள், கணினிகள், லேப்டாப்கள் ஆகியவற்றில் விங்ஸ் (Wings) எனப்படும் செயலியை நிறுவிவிட்டால் வரம்பற்ற அழைப்புகளை (ஆடியோ, வீடியோ) மேற்கொள்ள முடியும்.

இந்த செயலி மூலம் எந்தவொரு தொலைபேசி நிறுவனத்தின் எண்களையும் (லேன்ட்லைன் உள்பட) அழைக்க முடியும். வைஃபை வசதி உடையவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த சேவைக்கு சிம் கார்டு அவசியம் இல்லை. எந்தவொரு நெட்வொர்க் வைஃபை மூலமாகவும் அழைப்புகளை மேற்கொள்ளலாம். வெளிநாடுகளுக்கும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

இந்த செயலியைப் பெற பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சேவை மையங்களில் ரூ. 1,099 பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும் அல்லது www.bsnl.co.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் முறையில் கட்டணத்தை செலுத்தலாம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரணித்த மனித உடலில் இருந்து உரம் – அமெரிக்கா ஒப்புதல்...

மனித உடலில் உயிர் உள்ள வரை தான் நம்மால் இயங்க முடியும் உயிர் போன பிறகு யாருக்கும் எந்த பயனும் இல்லாதவகையில் நாம்...

இலவச டேட்டா, உங்க வங்கி கணக்கிற்கு டாட்டா… எச்சரிக்கை.

கத்தாரில் நடக்கும் உலகக் கால்பந்து போட்டியை ஆன்லைனில் காண 50 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது என்ற செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. 50...

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு !

தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளுக்காக இன்று இரவு முழுவதும் யாரும் தங்களின் சிம்மிற்கு ரீச்சார்ஜ் செய்ய முடியாது என ஏர்டெல் நெட்வொர்க் அறிவித்துள்ளது. மேலும் அந்த...
spot_imgspot_imgspot_imgspot_img