Saturday, September 13, 2025

பேராவூரணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

spot_imgspot_imgspot_imgspot_img

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும். ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 30க்கும், டீசல் ரூ 25க்கும் விற்பனை செய்யும் வகையில், மத்திய அரசு எரிபொருள் விற்பனை கொள்கையை திருத்தி அமைக்க வேண்டும். அதிகரித்து வரும் எரிபொருள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தஞ்சை மாவட்டம் பேராவூரணி பெரியார் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.பாலசுந்தரம் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் து.பன்னீர்செல்வம், நகரச் செயலாளர் எம்.சித்திரவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி ஏ.எஸ்.முருகேசன், விதொச ஒன்றியச் செயலாளர் ராஜமாணிக்கம், பழனியப்பன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...

இழந்த செல்வாக்கை மீட்க போராடும் குணா&கோ – நாங்கள் அழைக்கவில்லை என...

கடந்த ஆண்டு அதிரையில் அர்டா தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அன்றைய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளரும்...
spot_imgspot_imgspot_imgspot_img