Wednesday, March 18, 2026

அதிரை எக்ஸ்பிரஸ் தேர்தல் கணிப்பும் மெய்யானதே : உறுதிபடுத்தும் தேர்தல் முடிவுகள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை வரலாற்றில் முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தலில் 27 வார்டுகளிலும் வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்திவிட்டு வந்த வாக்காளர்களிடம் அதிரை எக்ஸ்பிரஸ் அரசியல் பிரிவு நிருபர்கள் நேரடி கருத்துக் கணிப்பு நடத்தினர். அதனைத் தொகுத்து மூன்று பாகங்களாக அதிரை எக்ஸ்பிரஸ் வெளியிட்டது.

இது நமது வாசகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் சூழலில் அதிரை எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பு 55.5% சதவீதம் மெய்யாகியுள்ளது.

அதாவது மொத்தமுள்ள 27 வார்டுகளில் 15 வார்டுகளின் தேர்தல் முடிவுகள் அதிரை எக்ஸ்பிரஸ் – ன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படியே அமைந்துள்ளது.

அதிரை எக்ஸ்பிரஸ் – ன் முதல் முயற்சியிலேயே 55.5 சதவீதம் சரியான கருத்துக் கணிப்பை வாசகர்களுக்கு அளித்திருப்பது உண்மையிலேயே மனநிறைவை தருகிறது.

இனி வரக்கூடிய காலங்களில் அதிரையின் அரசியல் சூழல், பொருளாதார நிலை, சமூக பிரச்சனைகள் உள்ளிட்டவைகளை நன்கு கவனித்து மிக மிக துல்லியமான கருத்துக் கணிப்புகளை தர அதிரை எக்ஸ்பிரஸ் அரசியல் பிரிவு முயற்சிக்கும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங்...
spot_imgspot_imgspot_imgspot_img