Saturday, September 13, 2025

அதிகரிக்கும் காய்ச்சலால் அவதியுறும் அதிரையர்கள்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

பருவமழை காலம் முடிந்த போதிலும் பனியும் குளிரும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வாட்டி வதைக்கிறது. வழக்கமாக ஜனவரி மாதம் வரை பனிப்பொழிவு காணப்படும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நீடிக்கிறது. வானிலை தட்பவெட்ப மாற்றத்தினால் அதிரை மக்களுக்கு தொண்டை வலியுடன் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இந்த காய்ச்சல் பாதிப்பு 5 நாட்களுக்கும் மேலாக உடலை வாட்டுவதால் அதிரையர்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சாதாரண தொண்டை வலியில் ஆரம்பித்து, சளி இருமலாக மாறி வறட்டு இருமல் ஏற்படுகிறது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், தற்போது தட்பவெட்பநிலை மாற்றத்தால் தான் இது போன்ற காய்ச்சல் ஏற்படுகிறது பொதுமக்கள் யாரும் அச்சமடைய தேவையில்லை எனவும், மேலும் மருத்துவரின் ஆலோசனையின்படி மட்டுமே மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மூச்சு விடுவதில் சிரமம், நினைவாற்றல் குறையும் போது, இடைவிடாத காய்ச்சல் ஏற்படும் சூழலில் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம் என தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img