Sunday, February 1, 2026

அதிரையில் சாலை வசதி மிகமிக மோசம்! நகராட்சியின் செயல்பாட்டை ஃபேஸ்புக்கில் விமர்சித்த மக்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை நகராட்சியின் கடந்த ஓராண்டு செயல்பாடு குறித்து ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் அதிரை எக்ஸ்பிரஸ் கருத்து கேட்பு நடத்தியது. வெளிப்படையாக நடைபெற்ற இந்த கருத்துக்கேட்பில் மொத்தம் 262பேர் பங்கேற்றனர். அதில் 58% மக்கள் அதிரை நகராட்சியின் செயல்பாடு திருப்தி இல்லை என தெரிவித்துள்ளனர். அதேசமயம் வெறும் 25% பேர் மட்டுமே நகராட்சியின் செயல்பாடு திருப்தி அளிப்பதாகவும் 17% பேர் பரவாயில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஃபேஸ்புக்கில் அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர் முகம்மது சரபுதீன், அதிரையை எதை வைத்து நகராட்சி என்று அறிவித்தார்கள்? மக்கள் தொகை அதிகரிப்பு? இன்றுவரை புரியவில்லை! வரிகள் தான் மிக அதிகமாக போட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் கருத்திட்ட விக்னேஸ்வரன் கண்ணன், வரி உயர்வுதான் மிச்சம் .. சாலை வசதி மிக மிக மோசம் என்று நச் என தெரிவித்துள்ளார்.

பைசல் அகமது தனது கருத்தில் “நகராட்சி தினமும் செயல்படுகின்றது. ஆனால் பணிகள் செயல்படவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.

பேருக்குத்தான் அதிராம்பட்டினம் நகராட்சி செயலில் ஒரு பேரூராட்சியில் செய்யும் பணி அளவுக்கு கூட செய்யவில்லை. சாலை அமைத்து தருகிறார்கள் ஆனால் முழுமையாக அமைத்து தரவில்லை. கால்வாயில் சரியான முறையில் தூர்வாரப்படுவதில்லை, சாலையில் இருபுறமும் கால்வாய் இருந்தால் ஒருபுறம் மட்டும் சுத்தம் செய்து விட்டு மறுபுறத்தை அப்படியே வைத்துவிட்டு செல்கிறார்கள். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ இல்ல அந்த வார்டில் நண்பர்களோ கவனிக்கவில்லை. தெரு விளக்குகள் அவ்வப்போது சரியான சமயத்தில் சரியான சமயம் என்று கூட சொல்ல முடியாது சில சமயங்களில் அந்த சாலைகள் முழுவதுமே இருட்டாக காணப்படுகிறது, இன்னும் பல இருப்பதாக ஓ.கே.எம். பைசி பின் சிகாபா தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்துள்ளார்.

இவ்வாறு மக்கள் கூறும் கருத்துக்களை செவிமெடுத்து கேட்டு தன் செயல்பாட்டை மேம்படுத்துமா அதிரை நகராட்சி? பொறுத்திருந்து பார்ப்போம்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img