Monday, December 1, 2025

ஆர்.எஸ்.எஸ் பயிற்சியில் தலித் சிறுவன் உயிரிழப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

திருச்சி மணிகண்டம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட சிறுவன் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்தார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த இளங்காகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவரது மகன் விஜய், திருச்சி மணிகண்டம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் முகாமில் பயிற்சி பெற்றுவந்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விஜய் இளங்காகுறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பயிற்சிக்கிடையே கல்லூரியின் படிக்கட்டு பக்கவாட்டில் உள்ள கைப்பிடியில் விஜய் சறுக்கி விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது தவறிவிழுந்து காயமடைந்ததாக, திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு சிறுவன் விஜய் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் விஜய் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார் என்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.

தலையில் அடிபட்டதில் விஜய் பலியானார் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தெரிவித்தனர். இதுகுறித்து விஜய்யின் தாயார் சரோஜா கொடுத்தப் புகாரின் பெயரில், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து மணிகண்டம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img