Sunday, April 28, 2024

அதிரையில் இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை..!

Share post:

Date:

- Advertisement -

தமிழகம் முழுவதும் கோடை வெயில் பொதுமக்களை பெரும் அளவில் வாட்டி வருகிறது.
இதனால்,பலர் வீடுகளில் தஞ்சம் அடைந்து கிடக்கும் சூழ்நிலையை நம்மால் காணமுடிகிறது.

இந்த கோடை வெயிலை தனிர்க்கும் வகையில் நேற்றைய தினம் கன்னியாகுமரி போன்ற இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனை அறிந்த பலரும் மழை தங்கள் பகுதிகளிலும் பெய்யுமா என எதிர்பார்த்த வண்ணம் இருந்தன.

இது, தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கும் பொருந்தும்.

இந்நிலையில், அதிரை மக்களின் கோடை வெளிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் நேற்று இரவு சுமார் 12:30மணிமுதல் லேசான மழை காற்று வீசத்தொடங்கியது.

இதனை தொடர்ந்து, இடியின் சப்தம் அதிகமாக இருந்தாலும், மின்னலின் வேகத்தாலும் மக்கள் பலர் லேசான அச்சத்துடன், பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

இதனையடுத்து, இரவு சுமார் 2:50மணியளவில் லேசாக மழை தூறல் தொடங்கி அதிகாலை சுமார் 4:45வரை மழை தொடர்ந்து லேசான முறையில் பெய்தது.

இதனால்,அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...