உலகம் முழுவதிலும் இருந்து இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை பல்லாயிரக்கணக்கானோர் நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியா மக்கா நகருக்கு சென்றுள்ளனர்.
ஹஜ் செய்யும் ஹாஜிகளுக்கு பணிவிடை செய்வதற்காக ஜித்தா,ரியாத்,தமாம் போன்ற நகரங்களில் இருந்து தமுமுகவினர் சுமார் 70 பேர் கொண்டவர்கள் மக்கா நகர் சென்றனர்.
(21-08-2018)முதல் (23-08-2018) வரையிலும் ஹாஜிகளுக்கு எண்ணற்ற பணிவிடைகளை செய்தனர்.
இதில் முடியாத ஹாஜிகளுக்கு நான்கு சக்கர நாற்காலியின் மூலம் அவர்களை உட்கார வைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வது, சைத்தானுக்கு கல் எறிய உதவுவது, தண்ணீர் பாட்டில்கள், பேரித்தம் பழங்கள் வழங்குவது, அவர்கள் தங்கி இருக்கும் மினா கூடாரத்திற்கு செல்ல வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஹாஜிகளுக்கு சிரமமில்லாமல் அவர்கள் தங்கியிருக்கும் கூடாரத்தில் கொண்டு போய் சேர்ப்பது என பலதரப்பட்ட பணிவிடைகளை தமுமுக செயல் வீரர்கள் செவ்வனே செய்தனர்.
தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் தமுமுகவின் சேவை தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது என்பதற்கு இந்நிகழ்வும் ஓர் சான்றாக உள்ளது.
தமுமுக செயல் வீரர்கள், ஹஜ் செய்யும் ஹாஜிகளுக்கு பணிவிடை செய்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.































