Sunday, April 28, 2024

முகமது அக்லாக் கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு யோகி கூட்டத்தில் முதல் வரிசை : ‘பாரத் மாதா கி ஜே’ கோஷம்!

Share post:

Date:

- Advertisement -

உ.பி. மாநிலம் தாத்ரியில் உள்ள பிஷாரா கிராமத்தில் பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றிய தேர்தல் கூட்டத்தில் பசுக்குண்டர்களால் முகமது இக்லக் என்ற முஸ்லிம் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் முதல்நிலை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட விஷால் சிங், மற்றும் 16 பேர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகேஷ்சர்மா என்ற வேட்பாளருக்காக யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் மேற்கொண்டார். இவர் கவுதம்புத் நகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராவார்.

2015-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி நாட்டை உலுக்கிய அந்த கொடூர சம்பவத்தில் பிஷாரா கிராமத்தைச் சேர்ந்த முகமது அக்லாக் என்ற முஸ்லிம் பசு இறைச்சியை வைத்திருந்ததாக அவரை வீட்டிலிருந்து இழுத்து வந்து பசுக்குண்டர் படை தாக்கிக் கொலை செய்தது.

இந்த வழக்கின் முதன்மை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட விஷால் சிங் பிற்பாடு தான் எதுவுமே செய்யவில்லை தன் மீது பொய் வழக்குப் போட்டதாகத் தெரிவித்தார். இப்போது அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர், அக்லாக் கொலை வழக்கு நீதி கிடைப்பது இனி கடினமே.

இந்நிலையில் அக்லாக் கொல்லப்பட்ட இதே கிரமாத்தில் யோகி ஆதித்யநாத் கூட்டத்தின் முதல் வரிசையில் குற்றம் சாட்டப்பட்ட விஷால் சிங், மற்றும் 16 பேர் அமர்ந்து ‘பாரத் மாதா கி ஜே’ என்று கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...