தஞ்சை மாவட்ட சிறுபான்மை துறை காங்கிரஸ் கட்சி சார்பில் வார இதழை எரித்து மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மல்லிப்பட்டினத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை துணைத் தலைவர் ஏ.நாகூர் கனி தலைமையில் நடைபெற்றது. தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் மீனவர் அணி தலைவர் என்.வீரையன் முன்னிலை வகித்தனர்.
இப்போராட்டத்தில் தவறாக பதிவு செய்த வார பத்திரிக்கையை எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதில் மூத்த காங்கிரஸ் நிர்வாகி சேதுராமன்,சிறுபான்மை வட்டார காங்கிரஸ் செயலாளர் அப்துல் அஜீஸ் ,காங்கிரஸ் நிர்வாகிகள் முகமது அப்துல் காதர்,சரபுதீன் ஜலீல் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.