பட்டுக்கோட்டை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பட்டுக்கோட்டை தொகுதியில் களம் காணும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்தை ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஏ.ஜே. ஜியாவுதீன், தனது ‘கத்தரிக்கோல்’ சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
சமூக ஆர்வலராக நீண்டகாலம் மக்கள் பணியாற்றி வந்த ஜியாவுதீன், தற்போது அரசியல் களத்தில் தனித்து நின்று களம் காண்கிறார். சாதி மற்றும் மதங்களைக் கடந்து மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் இந்தத் தேர்தலில் தான் போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நீண்டகாலமாக மக்களின் வலிகளையும், வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் உணர்ந்து செயல்பட்டு வருவதால், வெற்றி பெற்றால் தொகுதியின் மாற்றத்திற்காகத் தீவிரமாக உழைப்பேன் என அவர் உறுதி அளித்துள்ளார்.
“கஜா புயலின் மக்களோடு மக்களாக சேவையாற்றிய ஜியாவுதீன்க்கு , தேர்தல் களத்தில் வரிசை எண் 11-ல் கத்தரிக்கோல் சின்னத்தில் போட்டியிடுகிறார். தொகுதியின் முன்னேற்றத்திற்காக ஒருமுறை மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், மாற்றத்தை விரும்பும் வாக்காளர்களின் குரலாகத் தான் இருப்பேன் என்றும் அவர் பரப்புரையில் தெரிவித்து வருகிறார். வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பட்டுக்கோட்டை தொகுதி முழுவதும் அவரது பிரச்சாரம் தற்பொழுது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி: சுயேட்சை வேட்பாளர் கத்தரிக்கோல் சின்னத்தில் களம் காணும் ஜியாவுதீன்!
More like this

அதிராம்பட்டினத்தில் துணை ராணுவப் படையினர் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு: தேர்தல் பாதுகாப்பிற்காகப்...
அதிராம்பட்டினம்: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கி வரும் வேளையில், பொதுமக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும் வகையில்...

மரண அறிவிப்பு : A.K. ஜமால் முகமது அவர்கள்!
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெர கோப்பால வீட்டைச் சேர்ந்த மர்ஹூம். A.K அப்துல் மஜீது அவர்களின் மகனும், மர்ஹூம். முகமது கனி அவர்களின்...

அதிராம்பட்டினம் ஐயுஎம்எல் சார்பில் தேர்தல் நிதி வழங்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) சார்பில், வரும் தேர்தலில் வாணியம்பாடி மற்றும் பாபநாசம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளுக்காக,...





