அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்த ஆசிஃப், ஹாஜி ஆகிய இருவரும் பட்டுக்கோட்டைக்கு சென்றுள்ளனர்.
அப்போது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியதாக தெரிகிறது.
இதில்.நிலைதடுமாறிய அவர்கள் அருகில் உள்ள கொடிமர பீடத்தின் மீது பலமாக மோதியுள்ளனர்.
இதில்.இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டு, உயர் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் தமுமுக அவசர ஊர்திகள் மூலம் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.







