Wednesday, December 17, 2025

அதிரையில் மலேரியா டெங்கு பரவும் அபாயம் !! நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி நிர்வாகம் ?

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பேரூராட்சியின் 7வது வார்டு ஆறுமுக கிட்டங்கி தெருவில் பொதுமக்கள் ஒரு தனியார் நிலத்தில் குப்பைகளை கொட்டி வந்துள்ளனர். இவ்வாறு குப்பையை கொட்டுவது தொடர்ந்து வந்துள்ளது.

இந்நிலையில் அந்நிலத்தின் உரிமையாளர் அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகளை சுத்தம் செய்து ஓரிடத்தில் சேர்த்து வைத்துள்ளார். அக்குப்பைகளை அள்ளவேண்டிய அதிரை பேரூட்சியோ அதனை சுத்தம் செய்யாமல் அலட்சியம் செய்து வருகிறது.

அதிரை பேரூராட்சியில் இது குறித்து புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அள்ளப்படாமல் கிடக்கும் குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. தற்போது அதிரையில் மழையும் பெய்து வருவதால் அள்ளப்படாமல் கிடக்கும் அக்குப்பைகளால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவவும் வாய்ப்புள்ளது.

எனவே இவ்விஷயத்தில் அதிரை பேரூராட்சி நிர்வாகம் இனியும் அலட்சியம் செய்யாமல், விரைந்து செயல்பட்டு அக்குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிரை பேரூராட்சி நடவடிக்கை எடுக்குமா ? பொறுத்திருந்து பார்ப்போம் !

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத்...

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...
spot_imgspot_imgspot_imgspot_img