Monday, December 15, 2025

அதிரையில் பரவி வரும் டெங்கு…சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு !

spot_imgspot_imgspot_imgspot_img

கஜா புயலால் உருக்குலைந்த அதிரையில் டெங்கு, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இவ்விவகாரம் குறித்து நமது அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் தஞ்சை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை அதிராம்பட்டினத்தில் தஞ்சை மாவட்ட சுகாதாரத்துறை ஆய்வாளர், டிடிஹெச், ஹெல்த் இன்ஸ்பெக்டர், தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஆகியோர் இணைந்து காய்ச்சல் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் அதிராமபட்டினம் பேரூராட்சி துப்புறவு ஆய்வாளர், மேஸ்திரி, சுகாதார ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு ஆய்வு செய்தனர்.

மேலும் அதிரை பேரூராட்சியின் சார்பில் கொசு மருந்து மற்றும் சுகாதாரத்துறை சார்பில் நிலவேம்பு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...
spot_imgspot_imgspot_imgspot_img