Wednesday, December 17, 2025

தேர்தல் பிஸி… கோவை சிறுமி கொலையில் மௌனம் காக்கும் அரசியல் கட்சிகள்…!

spot_imgspot_imgspot_imgspot_img

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, திடீரென காணாமல் போனார்.

இரவு முழுவதும் சிறுமியை தேடிய நிலையில், மறுநாள் காலை வீட்டின் அருகே காயங்களுடன் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். உடனே சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டது தெரியவந்தது.

தமிழகத்தையே உலுக்கியுள்ள இச்சம்பவம் குறித்து பொதுமக்களும், நெட்டிசன்களும் தங்களின் கண்டனங்களையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளுக்கு பாரபட்சமின்றி கடுமையான தண்டனையை உடனே வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டு வருகிறது.

ஆனால் இதுகுறித்து தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுகவோ அதன் தலைவர் ஸ்டாலினோ இதுவரை வாய் திறக்கவில்லை. திமுக மட்டுமல்ல பெரும்பாலான அரசியல் கட்சிகள் இவ்விசயத்தில் மௌனத்தையே கடைபிடிக்கின்றனர்.

பெண்ணியம் குறித்து மணிக்கணக்கில் பாடம் எடுக்கும் கட்சிகள் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் எங்கே போயின ?

ஒரு வேளை தேர்தல் பிஸியாக இருக்கிறார்கள் போலும்…

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பீகார் முதல்வரின் ஈனச்செயல் : பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் –...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜா ஜியாவுதீன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் பிகார் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர...

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன. இதனை புதிய...
spot_imgspot_imgspot_imgspot_img