Monday, December 1, 2025

அதிரை மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகத்தின் முக்கிய வேண்டுகோள் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் பருவமழை சரியாக பெய்யாததால் மாநிலம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. தலைநகர் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நிலத்தடி நீர்மட்டத்தின் அளவும் அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையை சரிசெய்ய தமிழக அரசு, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக அமல்படுத்திட திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுக்கப்பப்பட்டுள்ளது.

அதில், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வங்கிகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், பள்ளிவாசல் கட்டிடங்கள், தனியார் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு அவசியம் ஏற்படுத்த வேண்டும் என்றும் வருங்கால சந்ததிகளின் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து அனைத்து கட்டிடத்திலும் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை ஏற்படுத்திட வேண்டும் என அதிரை பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் மாதாந்திர மின்தடை அறிவிப்பு!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 21/05/2025...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம்...

10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால்...

அதிரை அமமுக பிரமுகர் அபுபக்கர் குடும்பத்தாரின் மடல்!

அன்பார்ந்த SDPI,IUML அமைப்புகளுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும் ….. SDPI, IUML, எங்கள் உறவினர் MB அபுபக்கர் அவர்கள் செய்த /செய்ய தூண்டியவர்கள் ) செயல்கள் மிகவும் மன...
spot_imgspot_imgspot_imgspot_img