Monday, December 1, 2025

அரசுப் பள்ளியில் படித்து சாதித்தேன்… பள்ளி விழாவில் எஸ்.பி பேச்சு !

spot_imgspot_imgspot_imgspot_img

புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் இந்திய அரசியல் சாசன தினத்தின் 70- ஆவது விழா பள்ளி தலைமை ஆசிரியர் கி.இராணி தலைமையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பெ.வெ.அருண்சக்திகுமார் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியதோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் கடமைகளைப் பற்றி விளக்கிப் பேசினார்.

மேலும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் உங்களால் எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனையாளர்களாக உயர முடியும். நானும் அரசுப் பள்ளியில் படித்துத்தான் மருத்துவராகி பிறகு போட்டித் தேர்வு எழுதி ஐபிஎஸ் அதிகாரியாக உயர்ந்திருக்கிறேன். அதனால் உங்களாலும் முடியும். இந்தப் பள்ளியில் படிக்கும் நீங்கள் மிக, மிக பின்தங்கிய வறுமையில் வாடும் குடும்பத்திலிருந்து படிக்கிறீர்கள்.

பாடத்திட்டங்களை புரிந்து ரசித்து முறையாகக் கற்பதோடு பொது அறிவுத் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் பல உயர்ந்த பொறுப்புகளுக்கு நீங்கள் வரவேண்டும். உங்களில் உயர்ந்த பதவிகள் தான் உங்கள் பெற்றோருக்கும், இப்பள்ளி ஆசிரியர்களுக்கும், இவ்வூர் பொதுமக்களுக்கும் பெருமை சேர்க்கும் என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு..!

அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர். முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்: 01.07.2025 முதல் 15.07.2025...
spot_imgspot_imgspot_imgspot_img