Saturday, February 7, 2026

அதிரை : உடைந்த குடிநீர் குழாயை விரைவாக சரிசெய்த பேரூராட்சி – நன்றி தெரிவித்த கடற்கரைத்தெரு ஜமாத்தினர் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பெரிய ஜுமுஆ பள்ளி அருகே தனியார் நிறுவனம் சார்பில் கேபிள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டபட்டபோது, பேரூராட்சியின் ராட்சத குடிநீர் குழாய் உடைப்புக்குள்ளானது.

இதனால் நேற்று கடற்கரைத்தெரு, ஹாஜா நகர், புதுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒருநாள் முழுவதும் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

ராட்சத குழாய் உடைந்த நிலையில், அதனை உடனடியாக சரிசெய்யும் பணியில் அதிரை பேரூராட்சி நிர்வாகம் களத்தில் இறங்கியது.

பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேலு, சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் களத்தில் இறங்கி நேற்று இரவுக்குள் உடைந்த குழாயை சரி செய்தனர். இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேலு, சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோரின் சோதனைகளுக்கு பிறகு மீண்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

கோடை காலத்தில் மக்களின் தேவை கருதி, விரைவாக சரிசெய்த பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேலு, சுகாதார ஆய்வாளர் அன்பரசன் மற்றும் பேரூராட்சி ஊழியர்களுக்கு கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி நிர்வாகத்தினர் நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img