Sunday, February 1, 2026

கேரளா உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி – பாஜகவுக்கு படுதோல்வி !

spot_imgspot_imgspot_imgspot_img

கேரளாவில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 244 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முன்னிலை மற்றும் வெற்றி நிலவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

மாலை 4 மணி நிலவரப்படி :

6 மாநகராட்சிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி 4 இடங்கள்; காங்கிரஸ் கூட்டணி 2 இடங்கள்
86 நகராட்சிகளில் இடதுசாரி கூட்டணி 35 இடங்கள், காங்கிரஸ் கூட்டணி 45 இடங்கள்; பாஜக கூட்டணி 2 இடங்கள்

14 மாவட்ட ஊராட்சிகளில் இடதுசாரி கூட்டணி 11 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன

152 ஊராட்சி ஒன்றியங்களில் இடதுசாரி கூட்டணி 112 இடங்கள்; காங்கிரஸ் கூட்டணி 40 இடங்கள்

941 ஊராட்சிகளில் இடதுசாரி கூட்டணி 517 இடங்கள்; காங்கிரஸ் கூட்டணி 374 இடங்கள்; பாஜக 22 இடங்கள்

இவ்வாறாக வாக்கு எண்ணிக்கை நிலவரம் இருந்து வருகிறது. இதன்மூலம் கேரளா உள்ளாட்சி தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றியை பெற இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் – முஸ்லீம் லீக் கூட்டணி அங்கு இரண்டாம் இடத்தை பிடித்துள்ள நிலையில், பாஜகவுக்கு அங்கு படுதோல்வி பரிசாக கிடைத்துள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து வகையான உள்ளாட்சிகளில் இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணி அமோக முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடம் காங்கிரசுக்கு. கடைசி இடம்தான் பாஜகவுக்கு கிடைத்துள்ளது. பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் கும்மனம் ராஜசேகரன் ஆகியோர் மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து, தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

கேரளாவில் சபரிமலை விவகாரம், தங்ககடத்தல் விவகாரம் உள்ளிட்டவற்றை வைத்து முதல்வர் பினராயி விஜயனை கடும் விமர்சனம் செய்து பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்த நிலையில், அம்மாநில மக்கள் அதற்கு சிறிதும் மதிப்பளிக்கவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டிகிறது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

கேரளா எப்போதுமே பாஜகவுக்கு இடமளிக்காத மண் என்பது இந்த தேர்தல் முடிவுகள் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img