Sunday, February 1, 2026

ஏண் என்ற கேள்வி! அதிரை நகராட்சி பெயர் பலகைகளில் அல்லல்படும் தமிழ்!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி ஆவணங்களில் தொடர்ச்சியாக பிழையான தகவல்களும் எழுத்துப்பிழைகளும் அதிகளவில் தென்படுகிறது. குறிப்பாக ரூ.4.42கோடி மதிப்பிலான டெண்டர் ஆவணத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தை மதுரை மாவட்டம் என குறிப்பிட்டது சமீபத்தில் பேசும் பொருளானது. இந்நிலையில் தற்போது அதிரை வீதிகளில் வைக்கப்பட்டு வரும் பெயர் பலகைகளில் செந்தமிழ் சின்னாபின்னமாகி வருகிறது.

பெயர் பலகைகளில் இடம்பெற கூடிய வார்டு எண் என்பதற்கு பதிலாக வார்டு ஏண் என எழுதி பொதுமக்களை குழப்பமடைய செய்திருக்கிறது நகராட்சி. அதாவது வார்டு எதற்கு (ஏன்?) என அதிரை நகராட்சி கேள்வி எழுப்பும் வகையில் அந்த பெயர் பலகைகள் இருப்பதாக மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். சமீபகாலமாக அதிரை நகராட்சி நிர்வாகம் சரிவர இயங்காததின் வெளிப்பாடே இத்தகைய பிழைகளுக்கு காரணம் என்று வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள், உடனடியாக இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு கவனக்குறைவால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுவதற்கு முன் தகுதிவாய்ந்த அலுவலர்களை அதிரை நகராட்சியில் பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img