Wednesday, March 18, 2026

அதிரை SSMG கால்பந்து தொடர் : பட்டுக்கோட்டையை வீழ்த்தி அதிரை WFC அணி வெற்றி..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை SSM குல் முஹம்மது நினைவு மற்றும் இளைஞர் கால்பந்து கழகம் சார்பாக 29 ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி அதிரை கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த 6 நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற அதிரை WFC – PFC பட்டுக்கோட்டை அணிகள் மோதிய போட்டி மழை குறுக்கிட்டதால் தடைபட்டது. இதனிடையே இத்தொடரின் 10வது போட்டியில் மோதிய இவ்விரு அணிகளும் வெற்றியை தன்வசமாக்க போராடினர்.

முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் அதிரை WFC அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில், ஒருபக்கம் மீண்டும் அதிரை WFC அணி கோல் அடித்ததும், பட்டுக்கோட்டை அணியினர் தனது ஆட்டத்திறனை வேகப்படுத்தினர். இதன் பலனாக PFC பட்டுக்கோட்டை அணி தனது முதல் கோலை பதிவு செய்தது.

இருப்பினும் போட்டியின் முடிவில் அதிரை WFC அணி 2 – 1 என கோல் கணக்கில் PFC பட்டுக்கோட்டை அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img