Friday, March 6, 2026

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக இந்த நிலை உருவாகி இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.


பட்டுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில், காவல் துறையினர் கட்டுக்கோப்பாக பணியாற்றி வருவதால் குற்றச்செயல்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான சிக்கல்கள் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.


மேலும், காவல் துறையினர் இரவு ரோந்து, கண்காணிப்பு மற்றும் பொதுமக்களுடன் இணைந்து செயல்படும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதால், பட்டுக்கோட்டை வட்டாரத்தில் அமைதி நிலை நிலவுகிறது என்று பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.


இந்நிலையில், சட்டம் ஒழுங்கை தொடர்ந்து பாதுகாக்க காவல் துறையின் நடவடிக்கைகள் மேலும் வலுப்பெற வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்ப்பு தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப்...

அதிராம்பட்டினம்:  நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும்...

பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடியில் புதிய பேருந்து நிலையம்.. திறந்து வைத்த உதயநிதி...

பட்டுக்கோட்டையில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...
spot_imgspot_imgspot_imgspot_img