பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக இந்த நிலை உருவாகி இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
பட்டுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில், காவல் துறையினர் கட்டுக்கோப்பாக பணியாற்றி வருவதால் குற்றச்செயல்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான சிக்கல்கள் குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், காவல் துறையினர் இரவு ரோந்து, கண்காணிப்பு மற்றும் பொதுமக்களுடன் இணைந்து செயல்படும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதால், பட்டுக்கோட்டை வட்டாரத்தில் அமைதி நிலை நிலவுகிறது என்று பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கை தொடர்ந்து பாதுகாக்க காவல் துறையின் நடவடிக்கைகள் மேலும் வலுப்பெற வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்ப்பு தெரிவிக்கின்றனர்.








