Monday, January 20, 2025

நாய் வண்டியில் எற அலைமோதும் மக்கள் கூட்டம்!

spot_imgspot_imgspot_imgspot_img

 

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான இடங்களில் இன்றும் பேருந்துகள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் நாய் வண்டியில் ஏறிச் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில்  8ஆவது நாளாக  போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் பேருந்துகள் ஏதும் ஓடவில்லை. எனவே பயணிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். இதனால் ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் வழக்காக வாங்கும் கட்டணத்தை விட அதிகக் கட்டணத்தை வசூலிக்கின்றனர். ஆகவே மக்களுக்கு கூடுதல் செலவும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பொதுமக்களை நாய் வண்டியில் ஏற்றிச் செல்கின்றனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கத்தில் இருந்து பயணிகள், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நாய் வண்டியில் அழைத்து செல்லப்படுகின்றனர். பொதுமக்கள் நாய் வண்டி என்றும் பாராமல், அதில் கட்டணம் கொடுத்து பயணம் செய்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் நாய் வண்டியில் அவசர அவசரமாக ஏறிச் செல்லும் புகைப்படமும் வெளியாகி உள்ளது. இதனை நெட்டிசன்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு, “ இது மட்டும்தான் நடக்காமல் இருந்தது. அதுவும் இப்போது நடந்தேவிட்டது ” என வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மக்களே உஷார் தமிழகத்தில் வேகமாக  பரவி வரும் ‘ஸ்கிரப் டைஃபஸ்’ பாக்டீரியா..!

தமிழகத்தில் 'ஸ்கிரப் டைஃபஸ்' எனப்படும் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள்,...

மிரட்டும் கனமழை : 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளையும்...

⭕⭕ BIG BREAKING: அதிரை கடற்கரையில் ரூ.2கோடி மதிப்பிலான போதை பொருள்...

அதிராம்பட்டினம் அடுத்த கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, பட்டுக்கோட்டை கடற்கரை காவல் படையின்...
spot_imgspot_imgspot_imgspot_img