Friday, December 19, 2025

8 வழி சாலை திட்டம் : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!

spot_imgspot_imgspot_imgspot_img

சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவது, மரங்களை வெட்டுவது என்ற மோசமான நடவடிக்கையில் ஈடுப்பட்டால், அந்த சாலை திட்டத்திற்கே மொத்தமாக தடை விதிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை எச்சரித்துள்ளது.

பசுமை வழி சாலை என்ற பெயரில் சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வந்தது. இதில் விவசாய நிலங்கள் , பாரம்பரியமாக கட்டப்பட்ட வீடுகள் என கையகப்படுத்தப்பட்டன.

இதற்காக சேலம் , தருமபுரி , கிருஷ்ணகிரி , காஞ்சிபுரம் , திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கோபமாக சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதில் , தடையை மீறி 8 வழிச் சாலை திட்டத்துக்காக மரங்களை வெட்டுவதா ? சாலைக்காக மரம் வெட்டினால் முறையான காரணம் சொல்ல வேண்டும். திட்டத்தின் அறிக்கையில் எங்கும் மரம் வெட்டுவதாக ஏன் கூறவில்லை. திட்டத்தில் அப்படி இருக்கும் பகுதிகளை சமர்ப்பிக்க வேண்டும்.

எந்த சூழ்நிலையில் மரம் வெட்டப்படுகிறது என்று கூற வேண்டும். தேவையில்லாமல் மரங்களை வெட்ட கூடாது. சேலம் சாலைக்காக மரங்களை வெட்டியது ஏன் ? மரங்களை வெட்டமாட்டோம் என்று கூறிவிட்டு வெட்டியது ஏன் ? தமிழக அரசின் நடவடிக்கை முறையற்றது.

தமிழக அரசு இப்படியே செயல்பட்டால் திட்டத்திற்கே தடை விதிக்க வேண்டி வரும். தமிழக அரசு சேலம் சாலையால் ஏற்படும் சமூக பாதிப்பு குறித்து ஆய்வு அறிக்கை செய்ததா ? அப்படியென்றால் அந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். தமிழக அரசு இதில் உடனடியாக பதிலளிக்க வேண்டும் , இல்லையென்றால் இந்த சாலை திட்டத்திற்கு நிரந்தரமாக தடை விதிக்க நேரிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...

Indigo விமானத்தின் தரமற்ற சேவை : குமுறும் அதிரை பயணிகள்..!!

இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவைகளில் பெரிதும் பெயர் போன Air India பயணிகளில் அதிருப்திக்கும் அவ்வப்போது அசம்பாவிதங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்வது...

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...
spot_imgspot_imgspot_imgspot_img