Friday, May 3, 2024

அதிரை கிங் ஷாப்பிங் மாலில் பேரூராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை..!!

Share post:

Date:

- Advertisement -

கடந்த ஜனவரி 1ஆம் தேதி 2019 முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யவும், உபயோகிக்கவும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டது.

அரசின் உத்தரவை மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அச்சுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(08/01/2018) செவ்வாய்க்கிழமை மாலை 5மணியளவில் அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் சிலர் பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, அதிராம்பட்டினம் பகுதியில் இயங்கி வரும் கிங் ஷாப்பிங் மாலில் மாவுகள் மற்றும் மளிகை பொருட்கள் சில(காய்ந்த மிளகாய்) பிளாஸ்டிக் பைகளில் விற்பனை செய்ததை கண்டறிந்தனர்.

இதனையடுத்து, உணவுப்பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்டிருந்ததை கண்ட அதிகாரிகள் இதுபோல் பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கக்கூடாது என்றும் மீறினால் கடையின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அச்சுறுத்தலுடன் கூடிய அறிவுரையை வழங்கினர்.

இந்த அறிவிப்பு அதிரையில் உள்ள அனைத்து கடைகளுக்கு அடங்கும் எனவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...