பட்டுக்கோட்டையில் உள்ள மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ரத்ததான முகாம் மற்றும் ரத்த வகை கண்டறியும் முகாம் நடைபெற்றது.
இம்முகாமிற்கு மனோரா பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் சரவணன் நாடிமுத்து தலைமை தாங்கினார். பட்டுக்கோட்டை பாலகிருஷ்ணா மருத்துவமனையிலிருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வருகை புரிந்தனர்.
முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் ரத்த வகையை கண்டறிந்தனர். முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாட்டு நலபணித்திட்ட அலுவலர் அருண் செய்திருந்தார்.