Friday, May 3, 2024

வாக்குச்சாவடியில் “நமோ” உணவு பார்சல்… போலீஸே விநியோகம் செய்த கொடுமை…!

Share post:

Date:

- Advertisement -

இன்று நாடு முழுக்க லோக்சபா தேர்தல் முதற்கட்டமாக நடந்து வருகிறது. மொத்தம் 91 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.

ஆந்திர பிரதேசம், அருணாசலப்பிரதேசம், உத்தரகாண்ட், மிசோரம், நாகலாந்து, சிக்கிம், அந்தமான் மற்றும் நிக்கோபார், லட்சத்தீவு, தெலுங்கானா, அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மஹாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிசா, திரிபுரா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் நடக்கிறது.

இதில் உத்தர பிரதேசத்தில் முதற்கட்டமாக 8 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. அதில் நொய்டா தொகுதியும் ஒன்றாகும். இந்த நிலையில் நொய்டாவில் தேர்தல் அதிகாரிகளுக்கு ”நமோ” பெயர் பொறித்த உணவு பார்சல் வழங்கப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

போலீஸ் அதிகாரிகளே இந்த உணவு பொட்டலங்களை வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸ் காரில்தான் இந்த பொட்டலங்கள் எடுத்து வரப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

அதேபோல் வாக்காளர்களுக்கும் நமோ உணவு பார்சல் வழங்கப்பட்டுள்ளது. காவி நிற பாக்கெட்டில் பேக் செய்யப்பட்டு இருந்த அந்த பார்சலில் நமோ என்று எழுதப்பட்டு இருந்தது. ஆனால் இது யாருடைய நிறுவனம் என்று விவரம் வெளியாகவில்லை.

அதேபோல் இது போலீசுக்கு எப்படி கிடைத்தது, யார் இந்த உணவை ஏற்பாடு செய்தது, இதை வாக்காளர்களுக்கு கூட கொடுக்க யார் அனுமதி அளித்தது என்று கேள்வி எழுந்து இருக்கிறது.இதுகுறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...