Thursday, December 4, 2025

தண்ணீர் பஞ்சத்தின் உச்சம்.. சென்னையில் தீயை அணைக்க நீரின்றி தவித்த தீயணைப்பு வீரர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் பருவமழை பலனளிக்காததால் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தண்ணீர் பஞ்சம் தலைத் தூக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில் சென்னையை பற்றி கேட்கவே வேண்டாம்.

கடும் வெப்பத்தாலும் பருவமழை பொய்த்துவிட்டதாலும் சென்னைக்கு தண்ணீர் கொடுக்கும் ஏரிகளான புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்டவை வறண்டுவிட்டன.

இதனால் கடந்த இரு மாதங்களாக தண்ணீர் பஞ்சம் அதிகளவில் காணப்படுகிறது. நிலத்தடி நீரும் குறைந்துவிட்டதால் பொதுமக்கள் தண்ணீருக்காக பெரும் திண்டாட்டத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் மேடவாக்கத்தில் உள்ள குப்பைக் கிடங்கு ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். எனினும் தீயணைப்பு துறையினர் தண்ணீர் இல்லாததால் தண்ணீர் கொடுத்தால் வருவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து உள்ளூர் பஞ்சாயத்து பணியாளர்கள் அருகில் உள்ள சித்தேரியிலிருந்து நீர் கொண்டு வந்தனர். அத்துடன் தீயையும் பஞ்சாயத்து பணியாளர்களே எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தண்ணீரை அணைத்து வைத்தனர்.

இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பொதுமக்கள் கூறுகையில் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் அவர்களோ தீயை அணைக்க தண்ணீர் கொடுக்குமாறு கேட்டனர். இதையடுத்து சித்தேரியிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தோம். எனினும் குறிப்பிட்ட நேரத்துக்கு வீரர்கள் வரவில்லை என்றனர்.

இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் எங்களது அனைத்து வாகனங்களிலும் தேவையான தண்ணீர் உள்ளது. பெரிய தீவிபத்து ஏற்பட்டால் நாங்கள் மெட்ரோ வாரியத்திடமிருந்து தண்ணீர் கேட்போம். அது மட்டுமல்லாது எங்களுடைய வாகனத்தில் அருகிலிருக்கும் ஏரி அல்லது குளத்திலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு தேவையான உபகரணங்கள் உள்ளன.

இந்தச் சம்பவம் தகவல் பரிமாற்ற பிரச்சினை காரணமாக நடந்திருக்கலாம். மேடவாக்கத்தில் தீவிபத்து நடந்த அதே நேரத்தில் பீர்க்கங்கரணையிலும் தீவிபத்து ஏற்பட்டதால் தீயணைப்பு கட்டுப்பாட்டு துறையினர் தண்ணீர் தேவை என தவறாக தெரிவித்திருப்பர் என்றார் அந்த அதிகாரி.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img