Saturday, February 7, 2026

அதிரை கல்லூரியில் CAA,NRC,NPR சட்டங்களுக்கு எதிரான தொடர் போராட்டம்!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழர்கள் இஸ்லாமியர்களை அச்சுருத்தும் சட்டமான CAA,NRC,NPR ஆகிய சட்டங்களை எதிர்த்து இந்தியாவெங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளது.

மாணவர் அமைப்பின் சார்பில் போராட்டங்கள் வலுத்து வருவதால் இந்திய பாதுகாப்பு துறை ஆட்டம் கண்டுள்ளது.

இந்நிலையில் இன்று அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரி மாணவர் அமைப்பினர் தொடர் தர்ணா போராட்டத்தை கட்டமைத்து ஈடுபட்டு வருகின்றனர்.

கல்லூரி நுழைவுவாயில் அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு மத்தியில் கேம்பஸ் ஃப்ரண்ட் இந்தியாவின் தஞ்சை மாவட்ட தலைவர் சர்வத்கான் உரை நிகழ்த்தினார் அப்போது பேசிய அவர், மாணவர்கள் போராட்டத்தை சீர்குழைக்கும் நோக்கில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா மாணவர்கள் போராட்டத்தில் குண்டு வீசுவோம் என அப்பட்டமாக கூறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் இவரது பேச்சை காற்றில் பறக்கவிடும் காவல் துறை மாணவர்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது கண்டிக்கதக்கது என்றார்.

இந்த தொடர் தர்ணா போராட்டத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பி வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...
spot_imgspot_imgspot_imgspot_img