தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. தற்போது, தமிழகத்தின் மேலும் இருவருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 40 ஆக உயர்ந்திருக்கிறது. இரண்டு நபர்கள் தற்போது புதிதாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை, தமிழகத்திற்கான தேசிய சுகாதார மிஷன் உறுதி செய்துள்ளது.
அதில் ஒருவர் 42 வயதானவர். கும்பகோணத்தைச் சேர்ந்த அவர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று ஊர் திரும்பிய நிலையில், அவருக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டது.
மற்றொருவர், 49 வயதானவர். காட்பாடியில் சேர்ந்த அவர், வேலூரிலுள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவர் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுவிட்டு, மத்திய கிழக்கு நாடுகள் வழியே, காட்பாடி திரும்பியுள்ளார். இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சென்னையில் மட்டும் ஏற்கனவே 24,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படு வருகிறார்கள். இதில், ரத்த மாதிரிகள் சோதனைக்கு பிறகுதான், அவர்களுக்கு பிரச்சினை இருக்கிறதா இல்லையா என்பது தெரியவரும்.
#UPDATE: TN has 2 new +ve cases. 42 Y M, Kumbakonam,return from West Indies at #TMCH Thanjavur.49 Y M, from Katpadi, return from UK at #Vellore Pvt Hosp. Both traveled from abroad transit via Middle East. Pts are in isolation & stable.@MoHFW_INDIA @CMOTamilNadu #TNHealth #CVB
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 28, 2020