கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள அதிராம்பட்டினம் பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான எரிப்புறக்கரை, ராஜாமடம், தொக்காலிக்காடு மகிழங்கோட்டை, மழவேனிற்காடு, புதுக்கோட்டை உள்ளூர், பழஞ்சூர், நரசிங்கபுரம், சுந்தரனாயகிபுரம், மாளியக்காடு ஆகியவற்றை தனிமைப்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அந்தந்த கிராமங்களின் எல்லைகள் மூடப்படுகின்றன.
இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், தேவையின்றி அச்சப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.