Tuesday, April 30, 2024

டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது – திருமாவளவன் தலைமையில் விசிக-வினர் போராட்டம் !

Share post:

Date:

- Advertisement -

மே 7 அன்று டாஸ்மாக் – மதுக்கடைகளைத் திறக்கும் முடிவைக் தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி, நேற்று மே 6 ஆம் தேதி காலை 11 மணி முதல் 11.30 வரை தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் காண்-ஒலிக் கூடல் (Video Conference) மூலமாகவும், முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் வாயிலாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

“தமிழக அரசே,
மதுபானக் கடைகளைத் திறக்காதே! மக்களைக் கொல்லத் துணியாதே!

கொரோனா பரவச் செய்யாதே! குடிகெடுக்க முனையாதே! ” – என திருமாவளவன் கண்டன முழக்கங்களை காண்-ஒலிக் கூடல் மூலம் எழுப்ப விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் அவரவர் வீட்டு வாசலில் நின்று முழக்க அட்டைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டு ஓங்கிக் குரல்கொடுத்தனர்.

போரட்டத்தின் நிறைவில் தொல். திருமாவளவன் MP கண்டன உரையாற்றினார். கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் MP மற்றும் முன்னணி பொறுப்பாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...