Sunday, February 1, 2026

அதிரை அருகிலுள்ள கிராமங்களிலும் நிவாரண பணிகளை மேற்கொண்ட அதிரை பாப்புலர் ஃப்ரண்ட்..!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரோனா காரணமாக உலக மக்கள் அனைவரும் பெரும் அவதிக்கு உள்ளாகி கொண்டிருக்கின்றனர். இந்த பேரிடர் காலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அதிரை ஏரியா சார்பாக அதிரை மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தனர்.

அதிரைக்கு அருகாமையிலுள்ள கிராமத்தில் ஒரு நபருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி அவர்கள் இருக்கும் வீடு மற்றும் அந்த பகுதி முற்றிலும் அடைக்கப்பட்டது. அக்கம்-பக்கத்தில் யாரும் உதவாத காரணத்தினால் அவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இந்த தகவல் கிடைத்தவுடன் அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஏரியா தலைவர் S. முஹம்மது ஜாவித் தலைமையில் தன்னார்வலர்கள் அந்த வீட்டிற்கு சென்று, கடும் துயரில் இருந்த அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு தேவையான மளிகை சாமான்கள் காய்கறிகள் மற்றும் பால் போன்றவை ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
உடன் வருவாய் ஆய்வாளர் உமர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆனந்த், ஆனந்த ஜோதி மற்றும் கிராம உதவியாளர்கள் இருந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img